https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த முஸ்லிம் மாணவிகள்

ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த முஸ்லிம் மாணவிகள்



திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின் பெறுபெறுகளை இடைநிறுத்திய பரீட்சைகள் திணைக்களம்!



திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த முஸ்லிம் மாணவிகள் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.



பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு எதிராக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவிகள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த முஸ்லிம் மாணவிகள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். 

 




மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவிகளிடம் உறுதியளித்தார்.


இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் கலந்துக் கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post