எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கிண்ணியா நகர சபை ஊழியர்கள் இன்று(30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது, அரச ஊழியர்கள் நிம்மதியாக வாழ சம்பளத்தை அதிகரி! அரச ஊழியர்களை கடனாளியாக வாழ வைக்காதே! மின்சார கட்டணத்தை அதிகரித்து அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதே!, அரசியல்வாதிகளுக்கு சொகுசு வாழ்க்கை, அரச ஊழியர்களுக்கு நரக வாழ்க்கை! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment