கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மயில்தீவு கிராமத்தில் இன்று(9) நண்பகல் 1.45 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மினி சூறாவளியினால் எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் இரு வீடுகளின் கூரைகள் முழுமையானதாக சேதமடைந்திருப்பதோடு, ஏனைய ஆறு வீடுகளில் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.















Post a Comment