https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஹபரனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி.

ஹபரனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி.


ஹபரன, கொழும்பு வீதியில் நேற்று(4)மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில், ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் சென்ற மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில், தம்புள்ள  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கிண்ணியா மாலிந்துறையை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸாம் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார். மேலும் இவரது உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான செய்யது முஹம்மது முஹம்மது றியாஸ் ( வயது 40) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் தம்புள்ள  வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்தில் மரணமானவர் ஜப்பான் நாட்டுக்கு தொழிலுக்கு செல்வதற்காக அக்குறுனை பகுதி உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சந்திக்க சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வேகக் கட்டுப்பாட்டை இழந்த, மோட்டார் சைக்கிள் வளைவு ஒன்றில் இருந்த மின் கம்பத்துடன் மோதி, இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொஸார் மேலும் தெரிவித்தனர்.






Post a Comment

Previous Post Next Post