கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று(19) தம் கடமைகளை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் , இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி இராமேஸ்வரன், கபில நுவன் அத்துகோரல,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் , அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment