https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

கிண்ணியாவில் மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி.



கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


இன்று மாலை(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


50 வயது பெண் ஒருவரும் அவரது ஐந்து வயது பேரப் பிள்ளையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post