அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து இன்று(22) அலெக்ஸ் தோற்றம் பகுதியில் இன்று மாபெரும் கண்டன பேரணி ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டிருந்தது.
இந்தப் பேரணியானது திருகோணமலை அலெக்ஸ் தோட்டத்தில் இருந்து ஆரம்பித்து சர்வதே நிலையத்துக்கு முன்னால் வந்தடைந்து,
பல்கலைக்கழகம் மாணவர்களை விடுதலை செய், அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, மனித உரிமையை அங்கீகரி போன்ற கோஷங்களை உடைய பதாகைகளை ஏந்தி, கலந்து கொண்டோர், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.







Post a Comment