பாடசாலைக்கு கடமைக்கு சமுகளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு லீவு கணிக்க வேண்டாம்.
மு.முக்தார்(SLEAS-1)
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினை என்பன காரணமாக பாடசாலைக்கு ஆசிரியர்கள் வராது விட்டால் வராத நாட்களை தீவாக கணிக்க வேண்டாம் என கல்வியமைச்சு
ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. இவ்வறிவுறுத்தல் தொடர்பில் கல்வியமைச்சினால் இன்னும் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் அறிவுறுத்தல் நடைமுறையில் உள்ளது என்பதை பாடசாலைஅதிபர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.
எனினும் பாடசாலை ஆசிரியர்கள் தம்மால் பாடசாலைக்கு வரமுடியாது போனால் அதுபற்றி காரணத்தை குறிப்பிட்டு கட்டாயம் அதிபருக்கு அறிவித்தல் வேண்டும்.

Post a Comment