இந்த அருங்காட்சியகம் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
இது சுமார் 60 அடி ஆழம், 150 அடி நீளம் மற்றும் 85 அடி அகலம் கொண்டது, மேலும் எந்த டைவிங் அல்லது நீச்சல் வீரர்களும் எளிதாகப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகள் கடற்படைத் தளபதியின் பூரண மேற்பார்வையின் கீழ் கடற்படையினரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.
பவளப்பாறைகளை மீண்டும் வளர்ப்பது, மீன் வளத்தை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு டைவ் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இதேபோன்ற நீருக்கடியில் அருங்காட்சியகத்தை தங்காலையில் எதிர்காலத்தில் அமைக்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.







Post a Comment